தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மதுகம - கொழும்பு அதி சொகுசு பேருந்தில் கொரோனா தொற்று உறுதியானவருடன் தொடர்புடைய 34 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
மதுகம பகுதியிலேயே அவர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓவிட்டிகல, பதுகம மற்றும் நவஜனபதய பகுதிகளை சேர்;ந்தவர்கள் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இரத்தினபுரி - முவகம பகுதியில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பினை பேணிய 35 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் விற்பனை சந்தைக்கு மீனை கொள்வனவு செய்வதற்காக சென்ற ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.