அதிவேக நெடுஞ்சாலையில் அதி சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலையில் அதி சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவருக்கு தொற்று உறுதி!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மதுகம - கொழும்பு அதி சொகுசு பேருந்தில் கொரோனா  தொற்று உறுதியானவருடன் தொடர்புடைய 34 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={2}

மதுகம பகுதியிலேயே அவர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.


அவர்களில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓவிட்டிகல, பதுகம மற்றும் நவஜனபதய பகுதிகளை சேர்;ந்தவர்கள் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.


அதேநேரம் இரத்தினபுரி - முவகம பகுதியில் கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பினை பேணிய 35 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.


பேலியகொடை மீன் விற்பனை சந்தைக்கு மீனை கொள்வனவு செய்வதற்காக சென்ற ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.