ஜேர்மனி மற்றும் பிராண்ஸ் ஒரு மாதத்திற்கு முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜேர்மனி மற்றும் பிராண்ஸ் ஒரு மாதத்திற்கு முடக்கம்!

ஜெர்மனி, கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

ஒரு மாதம் நீடிக்கக்கூடிய பகுதிமுடக்கம் வரும் திங்கள் முதல் அமுலாகவுள்ளது. பிராண்சும் வரும் வெள்ளி முதல் நான்கு வார முடக்கத்திற்கு தயாராகி வருகின்றது. 

$ads={2}

ஜெர்மனியில் தனிப்பட்ட வகையில் வரும் திங்கட்கிழமை முதல், பத்துப் பேர் மட்டுமே ஒன்றுகூடமுடியும்.

அதிகபட்சம் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கலாம்.

ஜெர்மனியில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை மூடப்படும்.

விளையாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின்றி நடைபெற அனுமதிக்கப்படும்.

புதிய நடவடிக்கைகளின்படி, பள்ளிகளும் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்

புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு ஜெர்மானிய அரசாங்கம் நிவாரண நிதி வழங்கவுள்ளது. மொத்தமாக அங்கு, 479,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.