விகாரையில் புகுந்த யானை அட்டகாசம்; குழந்தையொன்று பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விகாரையில் புகுந்த யானை அட்டகாசம்; குழந்தையொன்று பலி!


கருவலகஸ்வெவ, ரஜவிகம விகாரையில் நேற்று (30) மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடொன்றின் போது காட்டு யானையொன்று புகுந்து அட்டகாசம் புரிந்ததால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.


சம்பவத்தில் நான்கு வயதான ஆண் குழந்தையொன்றே உயிரிழந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.


பௌர்ணமி தினத்தன்று குறித்த விகாரையில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் குறித்த குழந்தை தனது தாயுடன் அதில் கலந்துகொண்டுள்ளது. இதன்போது காட்டு யானையொன்று விகாரைக்குள் புகுந்து அட்டகாசம் புரியத் தொடங்கியுள்ளது.


$ads={2}


இதன்போது குறித்த குழந்தை அதனது தாயால் கைவிடப்பட்டிருந்த நிலையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.


சம்பவத்தில் காயமடைந்துள்ள குழந்தை ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.