லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்ட ஐந்து வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்ட ஐந்து வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள்!


முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் (LPL) T-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.


எதிர்வரும் நவம்பர் மாதம் LPL போட்டித் தொடர் கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.


இந்தப் போட்டித் தொடரில் சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் பங்கேற்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


$ads={2}


தற்பொழுது IPL போட்டிகளில் விளையாடி வரும் சில நட்சத்திர வீரர்களின் பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.


அன்ட்ரே ரஸல், பெப் டு ப்ளீஸி, டேவிட் மில்லர், டேவிட் மாலன் மற்றும் மான்விந்தர் பிஸ்லா ஆகிய வீரர்கள் இவ்வாறு போட்டித் தொடரிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.


இங்கிலாந்து – தென் ஆபிரிக்க போட்டித் தொடரில் பங்கேற்பதனால் LPL போட்டிகளில் பங்கேற்க முடியாது என டு ப்ளீஸி, மில்லர் மற்றும் மாலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


அன்ட்ரே ரஸல் உபாதை காரணமாக போட்டித் தொடலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.


பிஸ்லா எவ்வித காரணங்களையும் தெரிவிக்காது போட்டித் தொடரிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எதிர்வரும் நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரையில் முதலாவது LPL போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.