இலங்கையில் கொரொனாவின் ஆதிக்கம்; அறிமுகமாகவுள்ள மொபைல் ஆப்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரொனாவின் ஆதிக்கம்; அறிமுகமாகவுள்ள மொபைல் ஆப்!!

தொடர்பு தடமறிதலுக்காகவும், கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பயனர்களை எச்சரிக்கவும் மொபைல் அடிப்படையிலான App ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை கொழும்பு ஆங்$ads={2}கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த Appஇல் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார். அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்து பயனர்களை எச்சரிக்க இந்த App உதவும் என்று அவர் கூறினார். இந்த App எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

$ads={2}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமீபத்தில் மினுவாங்கொட கொரோனா வைரஸ் கொத்தணியுடன் இணைப்பில் இருந்த நபர்களின் தொடர்புகளை கண்டறிவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், தொடர்பு தடமறிதலுக்காக மொபைல் App உருவாக்கும் யோசனை கடந்த பல மாதங்களாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.