எம்.பி பதவி வழங்கவில்லை என்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்! ஜோன் அமரதுங்க தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்.பி பதவி வழங்கவில்லை என்றால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்! ஜோன் அமரதுங்க தெரிவிப்பு!


ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லையென்றால் அரசியலிலிருந்து ஓய்வுபெற முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


தேர்தலில் தோல்வியடைந்தவர்களைத் தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதில்லையென்பது ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் என்பதை ஜோன் அமரதுங்க, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவூட்டியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் இடம்பெற்றுள்ளது.


$ads={2}


கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்தது.


பொதுத் தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


ரணில் விக்ரமசிங்கவைப் போல் ஜோன் அமரதுங்கவும் கடந்த 1977ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், 43 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.