கொரோனா கொத்தணியில் மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா கொத்தணியில் மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 22 பேரும் மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 2,036 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

$ads={2}

இந்த நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,497 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து இந்த தொற்றுக்கு உள்ளான 2,081 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,403 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்கு உள்ளான மேலும் 08 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.