கொழும்பு கடற்படை ஊழியர்களுக்கு கொரோனா - கொரோனா பரவிய விதம் கண்டுபிடிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு கடற்படை ஊழியர்களுக்கு கொரோனா - கொரோனா பரவிய விதம் கண்டுபிடிப்பு


கொழும்பு கடற்படையில் ஐந்து ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐந்து ஊழியர்களின் நெருங்கிய நண்பர்கள் ஏற்கனவே புலனாய்வு மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராணுவதளபதி தெரிவித்தார்.


$ads={2}

கொழும்பு கடற்படை கப்பல்துறை வளாகத்தில் ஏற்பட்ட கொரோனா பரவல் சம்பவம் மதுகம பேருந்து தொடர்பானது என்பது தெரியவந்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார். மதுகம பகுதியில் பேருந்தில் பயணித்த கொழும்பு தேசிய மருத்துவமனையின் தாதி, பஸ்ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கொரோனா வைரசுக்கு இலக்கானது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறித்த நபர்களின் நெருங்கியநண்பர்களுக்கும் பரவியதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

இந்த கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகள் தடைபடாது என்றும், இது நிகழாமல்தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.