கடந்த அரசாங்கத்தின் போது செயற்பட்ட இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அலகரத்னம் மனோரஞ்சன் நேற்று (13) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்தோரை புத்தளத்தில் இருந்து சிலாவத்துறை வரையில் 221 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மூலம் அழைத்து சென்றதன் ஊடாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
$ads={2}
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு அதிகாரி செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெள்ளவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சற்றுமுன்னர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டு வாகன சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.