பேராயர் மால்கம் ரஞ்சித் பெயரை குறிப்பிட்டு மத முறுகளை ஏற்படுத்தவம் வகையில் காணொளிகளை வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணை இன்று (18) பிற்பகல் கொழும்பு - பத்தரமுல்லை பகுதியில் வைத்து CIDயினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகத் தொடர்பாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேகநபர் 43 வயதான பத்தரமுல்ல பகுதியை சேர்ந்தவர் என இனம்காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சந்தேக நபரை நாளை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.