இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்படி அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் மையங்களின் இருப்பவர்கள் எனவும், மேலும் 26 பேர் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2,075 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.