சுற்றுலாத்துறை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய உதவி நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுற்றுலாத்துறை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய உதவி நீடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மானிய உதவிகளை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதன்படி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் அல்லது வேறு சுற்றுலாத்துறை சங்கங்களால் பயிற்றுவிக்கப்பட்ட சுற்றுலா சாரதிகள், சுற்றுலா பஸ் சாரதிகள், உதவியாளர்கள், சுற்றுலாத்துறைசார் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் சஃபாரி ஊர்தி சாரதிகளுக்கு ஒருமுறை மாத்திரம் 15,000 ரூபாவை  வழங்கப்படவுள்ளது.


மேலும் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்த, மாகாண சபையால் பயிற்றுவிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டுனர்களுக்காக ஒருமுறை மாத்திரம் 20,000 ரூபாவை  வழங்குவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.