இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் மட்டத்திலேயே உள்ளது; நாட்டை முடக்க அவசியமில்லை! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் மட்டத்திலேயே உள்ளது; நாட்டை முடக்க அவசியமில்லை! -ஜனாதிபதி


கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு பாரதூரமாக இருந்த போதிலும் அது கட்டுப்படுத்தப்படும் மட்டத்திலேயே இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


கொரோனா பரவல் காரணமாக நாட்டை முடக்குவது அதற்கு தீர்வாக அமையாது எனவும் அவர் கூறியுள்ளார்.


அதேவேளை தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கவும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


$ads={2}


இதனிடையே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயம் தொடர்பாகவும் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது.


அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யவில்லை எனவும், அந்த விஜயத்திற்கான செலவை அமெரிக்காவே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.