சீனாவில் உறைந்த உணவு பேக்கேஜிங்கிலிருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனாவில் உறைந்த உணவு பேக்கேஜிங்கிலிருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது!


அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி அசுத்தமான உறைந்துபோன உணவில் தொற்று ஏற்படுத்தக்கூடிய புதிய கொரோனா வைரஸ் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் 19 நாடுகளைச் சேர்ந்த 56 நிறுவனங்களிலிருந்து உறைந்த உணவு இறக்குமதிக்கு சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் அந்நிறுவனங்களின் ஊழியர்களில் பலர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


$ads={2}

சமீபத்தில் கிழக்கு சாண்டோங் மாகாணத்தின் முக்கிய நகரான கிங்டாவோவில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எட்டு நோயாளிகள் உட்பட ஒன்பது பேரிடம், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிங்டாவோ நகரில் வசிக்கும் சுமார் ஒன்பது லட்சம் பேருக்கும், கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டது. புதிய தொற்றுக்கான காரணம் குறித்து சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு செய்து வந்த நிலையில், உறைந்திருக்கும் உணவின் மேற்புறத்தில் புதிய கொரோனா வைரஸ் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டது.

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, உறைந்த உணவு வழியாக உயிருள்ள கொரோனா வைரஸ் நீண்ட தூரத்திற்கு பரவ முடியும் என்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட முதல் நிகழ்வு இதுவாகும். இந்த சமீபத்திய அறிக்கைக்கு முன்னர், உறைந்த உணவு பேக்கேஜிங்கிலிருந்து எடுக்கப்பட்ட சில மாதிரிகளில் கோவிட் -19 இன் மரபணு தடயங்களை சி.டி.சி கண்டறிந்தது. இருப்பினும், இந்த மாதிரிகளில் காணப்படும் வைரஸின் அளவு மிகக் குறைவாக இருந்தது.

சீன சி.டி.சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங்டாவோவில் இரண்டு கப்பல் பணியாளர்கள் செப்டம்பர் மாதம் கோவிட் -19 நோயால் கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்த தொழிலாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜிங்கைக் கையாண்டுள்ளனர்.

இருப்பினும், கப்பல் பணியாளர்கள் உறைந்த உணவு பேக்கேஜிங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது வழக்கமான கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களா மற்றும் உணவு பேக்கேஜிங் மாசுபடுத்தப்பட்டதா என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் உறைந்த உணவு பேக்கேஜிங் கையாளும் தொழிலாளர்களுக்கு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு சீன சி.டி.சி அறிவுறுத்தியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.