கடற்படையிலிருந்து யோஷித இராஜினாமா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடற்படையிலிருந்து யோஷித இராஜினாமா!!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, இலங்கை கடற்படையிலிருந்து அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக யோஷித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து கடற்படை பதவியிலிருந்து யோஷித்த இராஜினாமா செய்தாரா என சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பட்டிருந்தன.

அதற்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் 10 ஆம் திகதி இராஜினாமா செய்வதற்கான கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து ஒக்டோபர் 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப் பணியாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.


$ads={2}

யோஷித்த ராஜபக்ஷ இலங்கை கடற்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் 08 மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ய விண்ணப்பித்ததாகவும், அவரது கோரிக்கையை ஒக்டோபர் 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் பிரதமரின் அலுவலக பிரதானியாக யோஷித்தவை நியமிக்க அமைச்சரவை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஒப்புதல் அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 15 ஆம் திகதி தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.