பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ, இலங்கை கடற்படையிலிருந்து அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக யோஷித்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து கடற்படை பதவியிலிருந்து யோஷித்த இராஜினாமா செய்தாரா என சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பட்டிருந்தன.
அதற்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் 10 ஆம் திகதி இராஜினாமா செய்வதற்கான கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து ஒக்டோபர் 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப் பணியாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
$ads={2}
இந் நிலையில் பிரதமரின் அலுவலக பிரதானியாக யோஷித்தவை நியமிக்க அமைச்சரவை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஒப்புதல் அளித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 15 ஆம் திகதி தனது கடமைகளை ஏற்றுக் கொண்டார்.