கல்கிஸ்சையில் நபரொருவருக்கு கொரோனா - மகளை பரீட்சைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்கிஸ்சையில் நபரொருவருக்கு கொரோனா - மகளை பரீட்சைக்கும் அழைத்துச் சென்றுள்ளார்


கல்கிஸ்சை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவியுடன் சென்றிருந்த அவரது தந்தை கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நபர் கல்கிஸ்சை இதுரு உயன பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கு துணிகளை விநியோகிக்கும் வர்த்தகர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நபர் வெலிகந்தையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அயல் வீடுகளில் உள்ள 12 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.