ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை PCR பரிசோதனை நடாத்தப்பட வேண்டுமென அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
நாட்டின் அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளிலும் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இவ்வாறு PCR பரிசோதனை நடாத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மினுவான்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய பாரிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
$ads={2}
இந்த நிலையில் பணியாளர்களுக்கு PCR பரிசோதனை நடாத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது