முகக்கவசம் அணியாதோரை மடக்கிப்பிடித்து எச்சரிக்கும் நடவடிக்கைகளை பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நகரசபை என்பன இணைந்து நேற்று (13) முதல் முகக்கவசம் அணியாதோரை கண்டுப்பிடிக்கும் பாரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
$ads={2}
இத்தேடுதலின் போது முகக்கவசம் அணியாது பயணம் செய்த பெரும் எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் சிக்கியுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட முகக்கவசம் அணியாதோர் எச்சரிக்கப்பட்டதுடன், விரைவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல். நஸீர்தீன் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.