கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தாதியாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
மத்துகமைவில் வசிக்கும் இப்பெண் களுத்துறை நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆதாரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட தாதியிடன் தொடர்பு கொண்டிருந்த மருத்துவமனை ஊழியர்களின் குழுவின் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள்இன்று கிடைக்கப்பெறவுள்ளன.