VIDEO: தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தோர் மீது மரம் வீழ்ந்ததில் இருவர் பலி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தோர் மீது மரம் வீழ்ந்ததில் இருவர் பலி!!


பலாங்கொடை – பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக கடும் காற்று வீசிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலவத்த தோட்டத்தைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.