இனி காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை - இலங்கையில் முதல் ட்ரைவ்-த்ரூ பரிசோதனை மையம் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை - இலங்கையில் முதல் ட்ரைவ்-த்ரூ பரிசோதனை மையம் அறிமுகம்!


கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒரு புதிய டிரைவ்-த்ரூ பி.சி.ஆர் சோதனை வசதியை நிறுவியுள்ளது, மருத்துவமனைஅல்லது கிளினிக்கிற்குச் செல்லாமல் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

கொழும்பில் அமைந்திருக்கும் நவலோக மருத்துவமனையே இப்புதிய சேவையை நிறுவியுள்ளது. பி.சி.ஆர் சோதனைகளுக்குஉட்படுத்த விரும்புபவர்கள், முன்கூட்டியே தங்களுக்கான நேரத்தினை ஒதுக்கி குறித்த பரிசோதனையை தங்கள் வாகனத்திலிருந்தே செய்துகொள்ளலாம்.


$ads={2}

அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளினால் வழங்கும் பி.சி.ஆர் சோதனைகளின் மாறுபட்ட விலைகள் குறித்து இப்போதுசுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் குறித்த சோதனைக்கு அதிகபட்சமாக ரூ. 6000 மாத்திரமே அறவிட முடியும் எனவும், ஆனால் பலர் தனியார்மருத்துவமனைகள் தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலிக்கிந்தாகவும் சுகாதார அமைச்சுதெரிவித்துள்ளது.

பி.சி.ஆர் சோதனைக்காக தனியார் மருத்துவமனைகள் ரூ. 8,000 - 15,000 அறவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.