கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் பணியாளரை பணியில் அமர்த்த முடியாது; நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் பணியாளரை பணியில் அமர்த்த முடியாது; நிறுவனங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!


கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட பின்னர் பணியாளர் ஒருவரை பணிகளில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.


சுற்றாடல் நிபுணரும், சமூக வைத்திய ஆலோசகருமான வைத்திய கலாநிதி இனோகா சுரவீர இந்த வலியுறுத்தலை தொழில் வழங்குனர்களுக்கு விடுத்துள்ளார்.


பணியாளர் ஒருவருக்கு இருமல், தடிமன் உட்பட்ட அறிகுறிகள் இருக்குமாயின் அவர் ஒரு வாரத்துக்கு வீட்டில் தங்கியிருந்த மருத்துவம் செய்துகொள்ளப்பட வேண்டும்.


$ads={2}


இந்நிலையில், அவர் பணியாற்றும் நிறுவனமும் அவரை கண்காணித்து பொது மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.


இதற்கான நிறுவனங்கள் யாவும் தமது நிறுவத்தின் கொரோனா மையம் ஒன்றை அமைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக சுற்றாடல் மற்றும் நிபுணரும் சமூக வைத்திய ஆலோசகருமான வைத்திய கலாநிதி இனோகா சுரவீர கேட்டுள்ளார்.


மேலும், அனைத்து தொழில் துறைகளுக்கும் சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன குறித்த வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.