1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற்றுக்கொள்வது தொடர்பாக சீன மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
$ads={2}
சீனாவே தற்போது உலகில் அதிகம் நிதி வசதிகளை கொண்டதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா கூட சீனாவிடம் ஒன்றரை ட்ரில்லியன் கடனை பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் கடன் பற்றி பேசும் சிலர் இது பற்றி ஏன் பேசுவதில்லை எனவும் கப்ரால் கேள்வி எழுப்பியுள்ளார்.