போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள உலகக்குழுத் தலைவருமான மாகந்துர மதூஷ் மீது இன்று (20) அதிகாலை துப்பாக்கி சூடு மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
இதன்போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சந்தேகநபர்கள் வீதியில் விழுந்தனர்.
குறித்த இடத்திற்கு பொலிஸார் செல்ல முற்பட்ட போதும் சந்தேகநபர்கள் தம்மிடம் இருந்த கைக்குண்டை வெடிக்கச் செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
$ads={2}
எவ்வாறாயினும், குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வௌ்ளவத்தை பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்படும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.