நாட்டில் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்ற போதிலும், பல பகுதிகளிலும் கிளைக் கொத்தணிகள் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் பல உள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் கவனயீனமாகச் செயற்பட்டால் விரைவில் சமூகப்பரவலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
$ads={2}
எனவே நாம் அனைவரும் கவனயீனமாக செயற்படுவோமானால் விரைவில் சமூக தொற்றை நோக்கிச்செல்ல வேண்டியேற்படும். அபாயமான நிலைமைக்கு முன்னால் நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.
இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றதால், அபாயநிலைமை குறைந்துவிட்டது என்று கூறமுடியாது.
பி.சி.ஆர். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கமைய இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.
எனினும், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.