
நாரம்மல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருட்டு முயற்சியில் ஈடுபடுத்துள்ளனர்.
குறித்த வீடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நபரொருவரின் வீடு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
$ads={2}
சம்பவம் இடம்பெற்றுள்ள நேரத்தில் குறித்த வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்ததால் வீடு காலியாக இருந்ததாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருக்கும் நபர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு அப்பகுதி வாசிகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்