கலேவல, ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (19) காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குறித்த மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீராட சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவரும் 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.