கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் காலி கித்துலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். மற்ற நபர் ராகம, பட்டுவத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
$ads={2}
அவரது மனைவி கராப்பிட்டி வைத்தியசாலையின் தாதியாக செயற்பட்டுள்ளார். தொற்றுக்குள்ளான நபருக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.