தற்போது சந்தையில் பல்வேறு விலையில் விற்கப்படும் இலங்கை தேயிலையினை 100 கிராம் ரூ .100 என கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கஷ்டப்படுகையில் வர்த்தகர்களுக்கு பெரும் இலாபங்களை ஈட்ட எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேலை, நாட்டில் நிலவும் கொரொனா தாக்கத்தினால், பொது மக்களுக்கு தரமான முகக்கவசங்களை அதிகபட்ச சில்லறை விலையான ரூபா. 20 க்கும் குறைவாக வழங்க சதொச மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.