மஸ்கெலியாவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஸ்கெலியாவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!


மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான லெமன் மோரா தோட்டத்தில் உள்ள 2 இளைஞர்கள் கொழும்பு மெனிங் சந்தையில் சிறு வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள இளைஞர் மட்டகளப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இளைஞருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


$ads={2}


இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் மஸ்கெலியா லெமன் மோரா தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.  


மேலும் கொழும்பில் கொரோனாவுக்காக மூடப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருவோர் தங்களது பெயர்களை அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும், சுகாதார பிரிவிலும், கிராம சேவகர் பிரிவிலும் பதிவு செய்வதன் மூலம் மலையகத்தில் இந்த நோய் பரவாது தடுக்க முடியும் என சுகாதார உயர் அதிகாரி தெரிவித்தார். 


$ads={2}


குறித்த சுகாதர அதிகாரி மேலும் கூறுகையில், கொரோனா முதல் அலையின் போது மலையகத்தில் இவ்வாறான நிலை தோன்றவில்லை இம்முறை சமூகப்பரவல் என்பதால் அதிகளவு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெளியிடங்களில் இருந்து வருவோர்களிடம் சுகாதார முறைப்படி நடந்துக் கொள்ளுமாறும். முகக்கவசம் அணியுமாறும், சவரக்காரம் கொண்டு கை கழுவுதல் ஆகிய முக்கிய அறிவிறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், அரசின் கட்டளைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.