மேலும் மூன்று கிராமங்கள் உடன் அமுலுக்கு வரும்வகையில் அதிரடி பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் மூன்று கிராமங்கள் உடன் அமுலுக்கு வரும்வகையில் அதிரடி பூட்டு!


மத்துகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவிட்டிகல, பதுகம, நவஜனபதிய ஆகிய இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் இந்த அறிவிப்பை இன்று (18) மாலை விடுத்துள்ளது.


அண்மையில் மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


இந்நிலையில், அவருடன் அநுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.


$ads={2}


இதையடுத்து, மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி தெரியவந்துள்ளது.


இந்நிலையில், இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்ட பிரதேசங்களில் மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.