கொரோனா பீதி - ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பீதி - ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் இடைநிறுத்தம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட நிலையில் ஆணைக்குழு மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.


$ads={2}


இதேவேளை, நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ளது.

அத்துடன், கொழும்பு நகரின் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு நகரில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டிய, நாராம்மல, தும்மலசூரிய, பன்னல மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும் வகையில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.