ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள்!


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாளைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணன்டோ, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளரிடம் எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்.


இந்தக் கடிதத்தின் பிரதியொன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வழங்கிய உத்தரவுக்கு அமையவே படைக்கல சேவிதர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.


பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ரிஷாட் பதியுதீனை நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானம் எடுத்திருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரை நாளை (22) மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவிப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே சபாநாயகர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.