ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!


நாட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுததப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்துள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும் தினங்கள் குறித்து பின்னர் அறிவிப்பதாக உயர் நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹாமுத்துகல வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் நோய் பரவும் ஆபத்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 $ads={2}

கொழும்பு புறக்கோட்டை, கோட்டை, பொரள்ளை, வெலிகடை பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பேருவளை, அளுத்கமை, பயாகல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.