வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி; பலர் தனிமைப்படுத்ததில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி; பலர் தனிமைப்படுத்ததில்!


பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் 13 மருத்துவர்கள் உள்ளிட்ட 53 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 12ஆம் திகதி இருதய நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதி ஆகியுள்ள நிலையில் கடந்த 15ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.


$ads={2}


அவர் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டுள்ள நிலையில் அங்கிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர் மீது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


இதன் காரணமாக வைத்தியசாலையில் இரண்டு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.