ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷவுக்கு 05 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், தற்போது அதிலிருந்து 02 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜேதாச ராஜபக்ஷவும் கடும் எதிர்ப்பைப் பொது இடங்களிலும் தெரிவித்து வருகின்ற நிலையில் அது காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவதானிகள்.