விஜயதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது! 20 விவகாரம் காரணமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விஜயதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது! 20 விவகாரம் காரணமா?


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷவுக்கு 05 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


எனினும், தற்போது அதிலிருந்து 02 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக விஜேதாச ராஜபக்ஷவும் கடும் எதிர்ப்பைப் பொது இடங்களிலும் தெரிவித்து வருகின்ற நிலையில் அது காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவதானிகள்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.