பரீட்சை வினாத்தாள் மோசடி; கைது செய்யப்பட்ட அதிபர் மீது விசாரணைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சை வினாத்தாள் மோசடி; கைது செய்யப்பட்ட அதிபர் மீது விசாரணைகள் ஆரம்பம்!


நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் வினாத்தாள் மோசடி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


குறித்த பாடசாலையின் அதிபரினால் உயர்தர பரீட்சையின் போது வெளிநபர் ஒருவரின் தொலைபேசி உரையாடலின் உதவியுடன் மாணவர் ஒருவருக்கு விடையளிப்பதற்கு உதவி புரிந்ததாக தெரிவிக்கப்பட்டே இவ்வாறு முறைப்பாடு பதிவாகியுள்ளது.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.