கொரோனா அச்சுறுத்தல் கருதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் கண்டி, தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
தலதாமாளிகையின் தியவடனநிலமேயினால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
ஏனைய பகுதிகளில் இருந்து தலதாமாளிகைக்கு பிரவேசிப்பவர்கள், தங்களது பிரதேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.