கம்பளை நகரில் பழைய பாலத்துக்கு மேலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததுடன், இரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்தது. எனவே, இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
$ads={2}
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 37 வயதான லஹிரு பண்டார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் எவ்வாறு கம்பளைக்கு வந்தார், என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக பொலிஸ் தரப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.