ஆணொருவரின் சடலம் கம்பளை பழைய பாலத்தில் இருந்து மீட்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆணொருவரின் சடலம் கம்பளை பழைய பாலத்தில் இருந்து மீட்பு!!


கம்பளை நகரில் பழைய பாலத்துக்கு மேலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.


தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததுடன், இரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்தது. எனவே, இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.


$ads={2}


வெலிமடை பகுதியைச் சேர்ந்த 37 வயதான லஹிரு பண்டார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


இவர் எவ்வாறு கம்பளைக்கு வந்தார், என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக பொலிஸ் தரப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன. பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.