எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை உட்பட 32 நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்களை இத்தாலிய ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தலாம்.
இத்தாலிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி,
இந்த ஒதுக்கீட்டில் ஆறு இத்தாலிய ஒப்பந்தக்காரர்களின் உதவியுடன் கனரக, வாகன, ஹோட்டல், உணவகம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்க முடியும்.