கம்பஹா கொரோனா நிலவரம் - 69 நபர்களுக்கு உறுதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பஹா கொரோனா நிலவரம் - 69 நபர்களுக்கு உறுதி


மினுவன்கொட மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களில் செய்யப்பட்ட 150 PCR பரிசோதனைகளில் 69 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார். 

அவர்களில் 69 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்ட முதல் தொற்றாளரருடன் தொடர்பில் இருந்த ஆடைத் தொழிலாளர்கள் எனஇனங்காணப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையின் மேலும் 1400 ஊழியர்கள் மீது இன்று மற்றும் நாளை பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என்றுஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக ஆடை உற்பத்தி தொழிற்சாலையின் ஊழியர்களை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நபர்கள்பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

$ads={2}

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஆடை தொழிற்சாலை ஊழியர்களைப் பார்வையிட்டவர்கள் வைரஸ்பாதிக்கப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதைக் கண்காணித்து அறிந்து கொள்வது அடுத்த 72 மணிநேரம் முக்கியமானது என்றார்.

கடந்த 07 நாட்களில் மினுவங்கொடை, திவுலபிட்டிய மற்றும் வேயங்கொடவுக்குச் சென்றவர்ககள் சுகாதார பிரச்சினைகளைசந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முகக்கவசம் அணிவது போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அத்தியாவசியதேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்றும் மேலும் பணிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் இராணுவதளபதி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா கூறுகையில், இன்று காலை நிலவரப்படி 150 பேர்திவாலப்பிட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணின் மகளுடன் தொடர்பு கொண்ட 17 பாடசாலை மாணவர்களும் தனிமைப்படுத்தலில்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா பரவலை தொடர்ந்து மினுவாங்கொடயைச் சேர்ந்த மேலும் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உபுல் ரோஹானாமேலும் தெரிவித்தார்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.