கிரிக்கெட் வீரர் தோனிக்கு 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வோம் என மிரட்டல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் வீரர் தோனிக்கு 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வோம் என மிரட்டல்!

பிரபல கிரிகெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்வோம் என சமூக வலைத்தளங்களில் சிலர் அருவருக்கத்தக்க வகையில் வசைபாடி வருகின்றனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

$ads={2}

கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகள் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல் போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது.

பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்லதொரு தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தரமற்ற ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. தோனியும் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் சிலர், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டு வருகின்றனர்.




$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.