20A அரசியலமைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் அறிக்கை!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20A அரசியலமைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் அறிக்கை!!!


அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை:

$ads={2}

சமகி ஜன பலவேகய பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் பிறகு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுஃப் ஹக்கீம், தமதுபாராளுமன்ற குழுவை நேற்று (23) மாலை தனது இல்லத்தில் கட்சி செயலாளர் நிஸாம் கரியாப்பர் முன்னிலையில் சந்தித்தார்.

'20 ஏ' மீதான வாக்களிப்பு தொடர்பான விடயங்கள் குறித்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு, '20 ஏ'வுக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் கட்டளைக்கு தங்கள் வாக்களிப்பு தொடர்பான நிலைப்பாட்டைவிளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது, இது இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர், கட்சி செயலாளர் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எச் எம் எம் ஹரீஸ், பைசல்காசிம், எம் தௌஃபீக், மற்றும் நசீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விவகாரத்தில் தொடர்பில், உயர் கட்டளை விரைவில் சந்திக்க வேண்டும் என்று தலைவர் தெரிவித்தார்.


எம் நிஸாம் காரியாப்பர்

செயலாளர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

24 அக்டோபர் 2020.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.