அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்கள் பள்ளிவாயல்களில் பேணப்பட வேண்டிய அவசர கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்கள் பள்ளிவாயல்களில் பேணப்பட வேண்டிய அவசர கொவிட்-19 கட்டுப்பாடுகள்!


06.10.2020 திகதியிடப்பட்ட  DGHS/COVID - 19/2020- 347 இலக்க சுகாதார அமைச்சின் சுற்று நிரூபம் மற்றும் கால வரையரைகளையொட்டி, இலங்கை வக்பு சபை பின்வறுமாறு தீர்மாணித்துள்ளது:


1). எந்தவொரு குறித்த நேரத்திலும் 100 நபர்களுக்கு மேல் தொழக்கூடிய பள்ளிவாயல்களில் 50 நபர்கள் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டவாறு ஐநேரத் தொழுகைகளையும் ஜும்மா தொழுகையையும் மாத்திரம் அனுமதித்தல்.


2). 100 பேர்களை விட குறைந்த தொகையினர் தொடக்கூடிய பள்ளிவாயல்களில் அத்தொகையில் 50% ஐ மாத்திரமே அனுமதித்தல்.


3). 50 பேர் அல்லது அதனை விடக் குறைந்த தொகையினரை எவ்வாறு தெரிவு செய்வது என்பதை ஜமாஅத்தாருக்கு முன்கூட்டியே அறிவித்தல்.


$ads={2}


4). பள்ளிவாயலில் நுளையும் போது ஆட்களை அடையாளம் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கைகழுவுதல், எல்லா நேரங்களிலும் முகமறைப்பு அணிதல், ஒரு மீடர் இடைவெளி பேணல், சொந்த முஸல்லாவில் தொழுதல் உட்பட ஏனைய அனைத்து சுகாதார, மற்றும் காவல் துறையினரது வரையறைகள் / கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டிப்பாக பேணப்படல்.


5). மறு அறிவித்தல் வரை மேற்குறித்த செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகள / ஒன்றுகூடல்கள் இடைநிறுத்தப்படல்.


6). மறு அறிவித்தல் வரை வரையறுக்கப்பட்ட பகுதிகளாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் தற்காலிகமாக மூடப்படல்.


மேலுள்ள 1, 2, 3, 4 ஆகிய வரையரைகளைப் பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் / பொறுப்புதாரிகள் ஐநேரத்தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை நடாத்துவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.


மேற்குறித்த பணிப்புரைகளை கண்டிப்பாக நிறைவேற்றத் தவறும் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்புதாரிகளுக்கு எதிராக வக்பு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஏ.பீ. எம். அஷ்ரப்

பணிப்பாளர் - வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.