மினுவாங்கொடை தொழிற்சாலையில் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட முதற்பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மினுவாங்கொடை தொழிற்சாலையில் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட முதற்பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


மினுவாங்கொடை Brandix ஆடை தொழிற்சாலையில் முதலாவதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது IDH மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.


தாம் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் தேசிய செய்தி ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


$ads={2}


எனினும், தொழிற்சாலையின் அதிகாரிகள் அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


உண்மையில், இவ்வாறு ஏற்பட்டமை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும், முன்னதாகவே தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்ததுடன், மயக்கமடைந்தும் விழுந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நெஞ்சு வலியின் காரணமாக தான் சிகிச்சைக்காக சென்றமையினால் தன்னை காப்பாற்ற முடிந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.


தொழிற்சாலையில் முன்னதாக இருந்த முகாமைத்துவம் தொடர்பில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், ஆனால், தற்போதைய முகாமைத்துவம் குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.


முன்னதாக இருந்த அதிகாரிகள், சிறியதொரு தடிமன் ஏற்பட்டதும் அது குறித்து ஆராய்ந்து பார்த்தனர். ஆனால், தற்போதைய முகாமைத்துவம் தொடர்பில் தான் கவலை அடைவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.


முதலாவதாக காய்ச்சல் வந்த நோயாளி தான் அல்ல என்றும், அதற்கு முன்னரே காய்ச்சல் மற்றும் மயக்கமடைந்த பலர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


ஒரு மாதமாக பணிக்கு சென்று இறுதி தினத்தில்தான் தனக்கு இவ்வாறு நடந்ததாக மினுவாங்கொடை Brandix ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக கொரோனா தொற்றுறுதியான பெண் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.