கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் உடலில் பிரேத பரிசோதனையின் பின் 18 மணி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் உயிருடன் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூரில், கொரோனாவால் உயிரிழந்த 62 வயது நபரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்து 18 மணி நேரத்திற்குப் பிறகு வாய், தொண்டை மற்றும் நாசி பகுதியில் குறித்த வைரஸ் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில், ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தடயவியல் வைத்தியர் துறையின் தலைவராக இருந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ், மேற்கொண்ட பரிசோனையிலேயே இது தெரியவந்துள்ளது.
இந்த பிரேத பரிசோதனை குறித்து
"நோய் செயல்முறை மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கும், சிகிச்சை நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று படிப்பதற்கும் நான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன். நான் இறந்தவரின் வாய், தொண்டை மற்றும் மூக்கிலிருந்து எடுத்த பல்வேறு துணிக்கைகளில், RD - PCR பரிசோதனையில் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டன, அதே நேரத்தில் முகம், கழுத்து அல்லது சுவாசப் பாதை மற்றும் நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் தோலில் வைரஸின் எந்த தடயமும் இல்லை. ஏனென்றால் நுரையீரல் மேற்பரப்பு பாக்டீரியா தொற்றுகளால் ஆதிக்கம் செலுத்தியது." என தெரிவித்துள்ளார்.
$ads={2}
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நோய் செயல்முறை மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கும், சிகிச்சை நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று படிப்பதற்கும் நான் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன். நான் இறந்தவரின் வாய், தொண்டை மற்றும் மூக்கிலிருந்து எடுத்த பல்வேறு துணிக்கைகளில், RD - PCR பரிசோதனையில் நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டன, அதே நேரத்தில் முகம், கழுத்து அல்லது சுவாசப் பாதை மற்றும் நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் தோலில் வைரஸின் எந்த தடயமும் இல்லை. ஏனென்றால் நுரையீரல் மேற்பரப்பு பாக்டீரியா தொற்றுகளால் ஆதிக்கம் செலுத்தியது." என தெரிவித்துள்ளார்.
அத்துடன், "பொதுவாக மென்மையான கடற்பாசி பந்து போன்ற நுரையீரல் தோல் பந்து போன்றது. அவை பொதுவாக 600-700 கிராம் எடையுள்ளவை, ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரல் ஒன்று 2,180 கிராம் எடையும், அமைப்பும், தோலின் நிறமும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரத்தக் கட்டிகள் இருந்தன, காற்றுப் பைகள் சிதைந்தன. வைரஸ் நுரையீரலுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது." என்றார்.
இந்த பரிசோதனையை மேற்கொள்ள அவருடன் உதவ யாரும் முன்வராததால் தனியாக சுமார் 1 மணி 10 நிமிடம் நேர பிரேத பரிசோதனை நடத்தியுள்ளார் வைத்தியர், எனினும் உடலைத் தூக்கி பிரேத பரிசோதனை மேசையில் வைப்பதற்கு மட்டும் ஒருவரின் உதவியை பெற்றுகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.