கொரோனா நோயாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கண்டி – கம்பளை கொனட்டுவல கிராம சேவகப் பிரிவைச் சேர்ந்த பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
குறித்த கிராம சேவகப் பிரிவில் 06 கிராமங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கிராமங்களில் இருந்து இதுவரை 05 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா நோயாளர்கள் இருவரது தகவல்கள் கிடைத்த போதிலும் குறித்த நபர்கள் அந்தப் பிரதேசங்களில் மறைந்திருந்ததை அடுத்து அங்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் போது இவ்வாறு புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டிருக்கின்றனர்.