கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வருகை தந்ததால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தெஹிவலை மத்திய வர்த்தக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்த ஒரு மீன் விற்பனையாளர் இந்த வர்த்தக வளாகத்தை பார்வையிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தற்போது குறித்த மீன் விற்பனையாளரின் தொடர்புகளை தேடி வருகின்றனர்.
மேலும் கட்டிடத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கலும் மூடப்பட்டது.