லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்! SLC வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்! SLC வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (லபிள்) தொடர், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து நடாத்தவுள்ள உரிமம் சார்ந்த T20 லீக் இவ்வாண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் உத்தியோகபூர்வமாக தொடங்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த போட்டிகள் நவம்பர் 14 முதல் டிசம்பர் 06 வரையான காலப்பகுதியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

23 மேட்ச்களை அடங்கிய இத்தொடர் மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்களான ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி - பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சூரியவெவ ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் போன்றவற்றில் இடம்பெறவிருப்பமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து 5 அணிகள் இப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.