எச்சரிக்கை: வேலைவாய்ப்பு வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எச்சரிக்கை: வேலைவாய்ப்பு வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி!

ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பண மோசடிக்கான விளம்பரங்களை பிரசுரித்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையின் கணணிக் குற்றத்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறி இந்தக்குழு விளம்பரங்களை செய்து வருவதாக தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறும் தாய்லாந்தின் இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

குலுக்கள் முறையில் கார் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் வங்கிகளில் பணத்தை செலுத்துமாறும் விளம்பரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் நிலையில் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.